Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான ஸ்பானிஷ் படிகளில் சுற்றுலாப் பயணிகள் அமர்ந்தால் ரூ.30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுற்றுலாப் பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைகாலமாக சுற்றுலா பயணிகளால் ரோம் நகர் அதிகரித்து வருவதால் காலம் கடந்து நிற்கும் வரலாற்று சின்னங்களை அவற்றின் அருமை தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் சிதைத்து விடுவார்களோ என இத்தாலி அரசு கவலையடைந்தது.
எனவே, 'ஸ்பானிஷ் படிகள்' உட்பட மேலும் சில உலகப் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னங்களில் 'முகாமிடுதல்' அல்லது வீடியோ, புகைப்படமெடுப்பது உள்ளிட்டவற்றை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அரசாங்கம் அறிவித்தது.
அதன்படி தற்போது ஸ்பானிஷ் படிகளில் அமர சுற்றுலா பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதையடுத்து சிறப்பு சுற்றுலாப் பிரிவு பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விதிகளை மீறியவர்களுக்கு எதிராக 400 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
47 minute ago