Editorial / 2017 நவம்பர் 26 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
முற்போக்கான கூட்டணி, நுவரெலியா மாவட்டத்தில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் யானையோடு இணைந்தும் போட்டியிடவுள்ளதாக கட்சி சார்ந்த ஒருவர் தெரிவித்தார்.
முடிந்தால் தனித்து வென்று காட்டுங்கள் என, சேவல் தலைவர் அண்மையில் சவால் விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் தனித்துப் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாம். ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், சின்னம் என்னவென்பதுதான்.
வாள் சின்னத்தில் போட்டியிடுவோம் என சங்கத்தின் தலைவர் விடாப்பிடியாக இருக்கிறாராம். ஆனால், மண்வெட்டியை மக்கள் மறந்துவிடவில்லை என முன்னணியின் தலைவர் கூறியிருக்கிறாராம்.
இது குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ஏனைய மாவட்டங்களில் சேவல் தனிவழி போகும் பட்சத்தில் அவர்களுக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலைப்பாடு பற்றியும் பேசப்படுகிறதாம்.
எது எப்படியோ, நுவரெலியாவில் தனித்தே களமிறங்குவோம் என்பதில் ஒத்தகருத்து நிலவுகிறது. இம்முறை போட்டி கொஞ்சம் சூடுபிடிக்கும் போல!
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago