Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை வீதி 5ஆம் கட்டைப் பகுதியில் இருந்து அக்கரைப்பற்று நகருக்கு அனுமதிப்பத்திரமின்றி 5 கால் நடைகளை கொண்டு சென்ற இருவரை, நேற்று (16) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும், கால்நடைகளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சிறிய ரக வாகனமொன்றையும் 5 கால்நடைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அம்பாறை வீதியில் நேற்று இரவு வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார், அக்கரைப்பற்று நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனத்தை சோதனையிட்ட போதே அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கொண்டுச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதில் 3 பசு மாடுகளும் இரண்டு எருமை மாடுகளும் கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago