2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளன மாதாந்த கூட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்த கூட்டம் அமைப்பின் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன் உரையாற்றுகையில்,

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் ஊடக தர்மங்களை தொடர்ந்து பின்பற்றி சமூகத்துக்கான முன்மாதிரிகளாக விளங்குவதுடன் யாவரும் ஒற்றுமையாக இருப்பதுதான் ஆரோக்கியமான விடயமாகவும் நமது பலமாகவும் அமையும்.

எதிர்வரும் மாதம் தமது அமைப்பின் ஊடகவியலாளர்களை கௌரவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்கான ஒத்துழைப்பினை வழங்கமாறும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து,கூட்டறிக்கையும் கணக்கறிக்கையும் வாசிக்கப்பட்டன.

கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இ.போ.சபை பஸ்ஸில் இலவச போக்குவரத்து அனுமதிகள் பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகளும் அங்கத்தவர்களால் முன்வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X