2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஆற்று மண் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 21 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு, 05 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல், நேற்றுத் திங்கட்கிழமை (21) உத்தரவிட்டார்.

குறித்த நபர், சம்மாந்துறை பொலிஸாரால் கடந்த வெள்ளிக்கிழமை (18) கைது ஸ்ரீசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இவ்வழக்கு விசாரணை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (21) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 05 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X