2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

உள வளத்துணை செயலமர்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

தேசிய உள வளத்துணை தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலக உள வளத் துணைப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அலுவல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான உளவளத் துணை செயலமர்வு இன்று செவ்வாய்க்கழமை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புத்துறை அமைச்சின் அனுசரனையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீபின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மன நல  வைத்தியர் டாக்டர் எம்.ஜே.நௌபல், மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தர் ;ஏ.ஏ.தீன் முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டு உளவளத்துணை ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பிரதேச செயலக உளவளத்துணை உத்தியோகத்தரினால் ஏற்பாடு செய்யபபட்ட இந்நிகழவில் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர்களான ஏ.எல்.தமீம், ஏ.ஹஸைனுதீன் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X