Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசிம்
கிண்ணியாவிலிருந்து-குளியாப்பிட்டி பகுதிக்கு அனுமதிப்பத்திரமின்றி கடற்சிப்பிகளை ஏற்றிச்சென்ற லொறியின் சாரதி நேற்று இரவு(20) கைது செய்யப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தளாய் -முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான கடற்சிப்பிகளை டிப்பர் லொறியொன்றில் கொண்டு செல்வதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து கந்தளாய் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர் கைப்பற்றப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.(s)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago