Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2017 டிசெம்பர் 04 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று காரியாலயத்துக்குட்பட்ட பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு மேல் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையைச் செலுத்தாத நீர்ப் பாவனையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலேயே, இந்நீர்த் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பாவனையின் அளவு போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இணைப்பு துண்டிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட தொகை நிலுவையை செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் தமது நீர்க்கட்டணத்தைச் செலுத்தி, அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர் துண்டிப்பு செய்யப்படும் வாடிக்கையாளர், நீர்க்கட்டண பட்டியல் தொகையுடன் தண்டப்பணத்தையும் முழுமையாக செலுத்திய பின்னரே, மீளிணைப்பு வழங்கப்படுமெனவும் பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.
நீர் துண்டிப்பு தண்டப் பணமாக, வீடுகளுக்கு 1,150 ரூபாயும், வர்த்தக நிலையங்களுக்கு 3,450 ரூபாயும் அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
38 minute ago
1 hours ago
3 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago
3 hours ago
7 hours ago