2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

தமிழர்களின் எதிர்காலம் ஒரு குடித்தொகையியல் நோக்கு எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் ஆலையடிவேம்பு பிரதேசசபை கலாசார மண்டபத்தில் நாளை சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) ஏற்பாட்டில் இடம்பெறும்

இக்கலந்துரையாடலில் சமுதாய வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.
இங்கு தமிழ்ச் சமூகத்தின் எதிர்கால நலனை கருத்திற் கொண்டு கலாநிதி முரளி வல்லிபுரநாதனால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன்;, மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்வார். பின்னர் எமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் உள்வாங்குவார். ஆகவே இக்கலந்துரையாடலில் அனைத்து பொதுமக்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X