Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசரத் திருத்த வேலை காரணமாக, மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி, நாளை (10) அம்பாறை வீதி, வீரமுனை, வங்கலாவாடி, ஹிஜ்ராபுரம் பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும், நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட அட்டப்பலம் பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும்.
நாளை மறுதினம் (11) காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி, தரவைக்கோவில், கடற்கரைப்பள்ளி, அம்மன்கோவில், வி.வி. வீதி, பீச் வீதி, உடையார் வீதி, இஸ்லாமபாத் வீட்டுத்திட்டம் ஆகிய பகுதியில் காலை 08.30 முதல் மாலை 05.00 மணி வரையும் மின் தடைப்படும்.
12ஆம் திகதி நிந்தவூர் திரையரங்கு வீதி பகுதியில் காலை 08.30 முதல் மாலை 04.30 மணி வரையும் 15ஆம் திகதி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, அண்ணமலை, சவளக்கடை, வேப்பையடி, சொறிக்கல்முனை, சென்னல்கிராமம், 1, 2 உடங்கா பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
17ஆம் திகதி, ஒலுவில் கிராமம், மல்கம்பிட்டி வீதி, ப்லக்து ஈஸ்ட், ப்லக் ஜெ வெஸ்ட், மலையடிகிராமம், கல்லரைச்சல் 01,02,03, கைகாட்டி, நைனாகாடு, சம்மாந்துறை பகுதிகளிலும் 18ஆம் திகதி, காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, நாவிதன்வெளி, அண்ணமலை, சவளக்கடை, வேப்பையடி, சொறிக்கல்முனை, ஆகிய பகுதியில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
1 hours ago
14 May 2025