2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் 564 பேருக்கு டெங்கு நோய்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் 564 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட டெங்கொழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை நிந்தவூர் பிரதேசத்தில் இன்று நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

கடந்த 10 மாதங்களை விட நவம்பர் மாதம் மிகக் கூடுதலான டெங்கு நோயாளர்கள் நிந்தவூர், அட்டாளைச்சேனை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில்  அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நுளம்புகள் பெருகும்; இடங்களை அழிக்க வேண்டும் என்பதுடன், சூழலை அசுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதாகும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .