2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கல்முனை ஸாஹிரா மாணவர்கள் சாதனை

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

இலங்கை பொறியியலாளர் நிறுவனம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(30) நடைபெற்ற டெக்னோ கண்காட்சியில் மென்பொருள் ஆக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்கள் மூவர் தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த பிரபல பாடசாலைகள் பங்கேற்ற மேற்படி மென்பொருள் ஆக்கப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் எம்.எச்.அஹமட் மஹ்தி, எம்.எச்.அப்ரத் சுஜா மற்றும் ஏ.ஸி.முஹம்மட் ஜீஸான் ஆகியோரே இவ்வாறு தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

அண்மைக் காலமாக இக்கல்லூரியில் உயர்தர தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்கள் தேசிய,மாகாண ரீதியில் பல சாதனைகள் புரிந்து வருவதுடன் புத்தாக்கத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதனை படைத்த மாணவர்களுக்கும்  உயர்தர தொழில்நுட்ப பிரிவு பகுதித்தலைவர் ஏ.ஆதம்பாவா,தகவல்தொழில்நுட்ப பாட பொறுப்பாசிரியர் எம்.ஐ.எம்.பஸீல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஆசிரியர்கள்,இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி முஜீன் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட பலர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .