2025 ஜூன் 30, திங்கட்கிழமை

காட்டு யானைகளால் ஸ்ரீவள்ளிபுரம் நாசம்

எஸ்.கார்த்திகேசு   / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வனக்குரவர்கள் வாழும் ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்துக்குள், இன்று (09) அதிகாலை 12.30 மணியளவில் காட்டுயானைகள் நுளைந்து, வீடுகளையும் கடையொன்றினையும் தாக்கியதுடன், பயிர்களையும் நாசப்படுத்தியுள்ளதென, கிராமவாசிகள் கவலை தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக் வந்த திருக்கோவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி டி.கேதீஸ், அழிவுகள் தொடர்பான விவரங்களைத் திரட்டியதுடன், தற்பாதுகாப்புக்காக யானை வெடிகளையும் மக்களிடம் நேற்று விநியோகித்துச் சென்றார்.

யானைகளிடம் இருந்து பாதுகாப்பதங்கான யானை வேலியை விரைவாக அமைத்துத் தருமபடியும் இல்லாது போனால் நாங்கள் அனைவரும் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி மரணிக்கும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X