Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2022 மார்ச் 13 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்தில் கடந்த பெப்ரவரி மாதம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 04 இலட்சத்தி 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர் கே.எம்.ஏ. றிஸ்லி, நேற்று (13) தெரிவித்தார்.
கூடுதலான விலைக்கு பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்து அம்பாறை, தெஹியத்தக்கண்டி, பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸின் ஆலோசனைக்கமைய, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம். சாலிய பண்டார தலைமையில், பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் சுற்றி வளைப்புகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
பெப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட 63 சுற்றிவளைப்புகளில், 51 வர்த்தகர்களுக்கெதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும், நீதிமன்றங்களால் 04 இலட்சத்தி 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு பொருள்களை விற்பனை செய்தல், நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பொருள்களை காட்சிப்படுத்தியமை, காலவதியான பொருள்கள் மற்றும் தரமற்ற பொருள்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கெதிராகவும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ததாகவும் கூறினார்.
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago