2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சம்மாந்துறையில் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி அம்பாறை மாவட்ட பார்வை இழந்தோர் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை மாலை 04 மணிக்கு சம்மாந்துறை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக பார்வை இழந்தோர் அமைப்பின் கிழக்கு பிராந்திய தலைவர் எம்.பி. அப்துல் றகுமான் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

இந் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாகவும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எம். மன்சூர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, விழிப்புணர்வற்றோருக்கு வெள்ளைப் பிரம்பு விநியோகித்தல், வாழ்வாதார உதவிகள் வழங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கள் என்பன நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X