அஸ்லம் எஸ்.மௌலானா / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்துக்கான வர்த்தமானி பிரகடனத்தை எதிர்வரும் 28ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில், அமைச்சு அலுவலகத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஸ்தாபிப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைள் யாவும் பூர்த்தியடைந்திருப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் அதற்கான வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட முடியுமெனவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026