2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சொறிக்கல்முனையில் கொள்ளை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையிலுள்ள வீடொன்றை உடைத்து, 47,500 ரூபாய் பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என்று, சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்த அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை (16) அதிகாலை வீட்டின் ஜன்னலை உடைத்து உட்புகுந்து மடிக்கணணி, அலைபேசி மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன என, அதன் வீட்டு உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .