2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சுத்திகரிப்பு வேலை

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,நடராஜன் ஹரன்

கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்றங்களின் கொத்தணி சுத்திகரிப்பு வேலைத்திட்டம் இன்று வியாழக்கிழமை பொத்துவிலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பொத்துவில் உள்ளூராட்சிமன்றத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் மற்றும் லகுகல ஆகிய உள்ளூராட்சிமன்றங்கள்; இணைந்து இந்த சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பித்தன.

மழைக்காலத்தை கருத்தில் கொண்டு வடிகான்கள், அரச நிறுவனங்கள், பாடசாலைகள், வீதியோரங்கள், பொதுச் சந்தை மற்றும் பஸ் நிலையங்களில் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நாளை வெள்ளிக்கிழமை திருக்கோவில் உள்ளூராட்சிமன்ற எல்லைப் பிரதேசங்களிலும் நாளைமறுதினம் சனிக்கிழமை (17) லகுகல உள்ளூராட்சிமன்றப் பிரதேசங்களிலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X