Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்னாகாடுப் பிரதேசத்தில் துப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எச்.எம். அறூஸ் உத்தரவிட்டார்.
நெய்னாகாடு பாலத்துக்கு அருகில் திங்கட்கிழமை (09) இரவு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்த போது, துப்பாக்கியின் உரிதிப்பாகங்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் தப்பியோடிவிட்டாரெனவும் மோட்டார் சைக்கிளுடன் நின்ற மற்றைய நபர் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் நேற்று (10) மாலை ஆஜர் செய்த போது, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
தப்பியோடிய சந்தேக நபரைத் தேடிவருவதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணையையும் மேற்கொண்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
40 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
56 minute ago