Editorial / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், ஒரு நாள் அடையாள பணி பகிஷ்கரிப்பில் இன்று (25) ஈடுபட்டனர்.
மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதிச் சேவைகள், சொத்துகளுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் என்பவற்றுக்குத் தீர்வுகள் வழங்கப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஊழியர்கள் இங்கு முன்வைத்தனர்.
இக்கோரிக்கைகளுக்கு இதுவரையில் சரியான தீர்வு வழங்கப்படவில்லையென, தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தெரிவித்தார்.
எமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமையால், மேற்படி அடையாள பணி பகிஷ்கரிப்புப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்ளேமனம் உயர் கல்வியமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் சரியான தீர்வு கிடைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
எமது கோரிக்கைளுக்கு சாகமான தீர்வு தராவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 05ஆம் திகதியும் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்படி கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 17ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில், பல்கலைக்ககை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago