Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 01 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
அமைச்சரவைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 2 மாதங்கள்; கடந்த நிலையிலும் கூட, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கும் நடவடிக்கையில் மேலும் தாமதம் காணப்படுவதாக அம்பாறை மாவட்டச் சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர், இன்று(01) தெரிவித்தார்.
இதன் காரணமாகப் பலர் நியமனங்களைப் பெறும் வாய்ப்பை இழக்கும் அபாயம் காணப்படுவதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் கவனத்துக்கு கடந்த திங்கட்கிழமை கொண்டுவந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் மற்றும் கிழக்கு மாகாணக் கல்வி அசைம்சர் எஸ்.தண்டாயுதபாணியையும் ஏற்கெனவே சந்தித்துக் கலந்துரையாடப்பட்டது.
இந்த நியமனங்களை வழங்குவதற்கான அனுமதி மத்திய கல்வி அமைச்சு மற்றும் திறைசேரியிடமிருந்து கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த 20 வருடகாலமாக மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் 445 தொண்டர் ஆசிரியர்கள், தங்களுக்கான நிரந்தர நியமனங்களுக்காக காத்திருக்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'எமது சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் காரணமாக தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கு கடந்த ஜனவரியில் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியிருந்தது. எனினும், இவர்களுக்கு நியமனங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் கிழக்கு மாகாண சபையால் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை' என்றார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025