Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மே 20 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அண்ணாமலை பிரதேசத்தில் தாயை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மகளை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் இன்று (19) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை தாய்க்கும் மகளுக்கும் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதையடுத்து, மகள் தாயின் தலையில் போத்தலால் அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த தாய் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சவளக்கடை பொலிஸாரால் மகள் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மகளை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் நேற்று (19) ஆஜர்செய்தபோதே இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
20 minute ago
26 minute ago