Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகளின் குடும்பங்களுக்கான சீட்டிழுப்பு திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான காலோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது,2012ஆம், 2013ஆம் ஆண்டுகளின் வீட்டுக்கான சீட்டிழுப்பு திட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை, ஒலுவில், தீகவாபி மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 12 திவிநெகும பயனாளிகளுக்கு தலா ரூபாய் 150,000 பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, ஏ.எல்.எம்.நஸீர்,திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.எஸ்.நயீமா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago