2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

திவிநெகும வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜன் ஹரன், வி.சுகிர்தகுமார்

திவிநெகும திணைக்களத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளும் கோழித்தீனியும்  வழங்கும் நிகழ்வு, பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் திங்கட்கிழமை (04), ஆலையடிவேம்பு பிரதேசச் செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திவிநெகும உதவிபெறுகின்ற, கோழி வளர்ப்பைத் தமது வாழ்வாதாரமாகக் கொண்ட 15 பயனாளிகள் தலா 42 கோழிக்குஞ்சுகள், கோழித்தீனி, கோழிகளுக்கான தீனிப் பாத்திரம் மற்றும் நீர்ப் பாத்திரம் என்பனவற்றைப் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதேசச் செயலாளரோடு உதவிப் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராஜா, தலைமையக முகாமையாளர் கே.நேசராஜா, கணக்காளர் கே.கேசகன், கருத்திட்ட முகாமையாளர் திருமதி. அருந்ததி மகேஸ்வரன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கே.பி.இராசஸ் ஸ்ரீ மற்றும் எஸ்.பாக்கியராஜா ஆகியோர் குறித்த பயனாளிகளுக்கான குறித்த வாழ்வாதார வழங்கிவைத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X