2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘நிவாரண நிதிக்கு விண்ணப்பியுங்கள்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டு பெரும்போக நெற்பயிர்ச் செய்கைக்கான உர நிவாரண நிதியைப் பெறுவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, பாலமுனை கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப் தெரிவித்தார்.

விவசாயிகள், தங்களது விவசாயக் குழுவின் ஊடாக விண்ணப்பப்படிவத்தைப் பெற்று, கமநல சேவை நிலையத்தில் உறுதிப்படுத்தி, மீண்டும் விவசாயக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

உர நிவாரணப் பணத்தை வைப்பிலிடுவதற்கு விவசாயிகளால் முன்மொழியப்படும் இலகுவான வங்கி, அதன் கிளை மற்றம் இலக்கம் என்பன சரியாக குறிப்பிட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X