Editorial / 2017 டிசெம்பர் 07 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, யூ.எல். மப்றூக், ரீ.கே.றஹ்மத்துல்லா
ஒலுவில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர், இன்று வியாழக்கிழமை (07) அதிகாலை காணாமல் போயுள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் வெளிச்ச வீட்டுப் பிரதேசத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது குறித்த படகு கவிழந்ததில், ஒலுவில் 06 ஆம் பிரிவைச் சேர்ந்த அபுசாலி முகம்மது இப்றாகிம் (வயது-33) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவரைத் தேடும் பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago