Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 09 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, திராய்க்கேணி ஆகிய பிரதேசங்களில் நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் பொருட்டு புகை விசிறும் நடவடிக்கை நேற்று (09) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.
பாடசாலைகள், அரச, தனியார் நிறுவனங்கள், மதஸ்தாபனங்கள் உட்பட டெங்கு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் புகை விசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
கிணறுகளில் நுளம்பின் குடம்பிகள் உருவாகாமல் தடுப்பதற்கு மருந்துகள் இடப்பட்டு வருவதாகவும், குடிநீர் கிணறுகளில் நுளம்புகளை அழிக்கும் பொருட்டு மீன் குஞ்சுகள் இடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் 2016 ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 22 பேரும் இம்மாதம் 02 பேரும் டெங்கு நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய வகையில் பராமரிப்பின்றி இடங்களை வைத்திருப்பவர்களுக்கெதிராக நீதிமன்றின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். அலாவுதீன் மேலும் தெரிவித்தார்.
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago