2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பொத்துவில் மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொத்துவில், ஜலால்தீன் சதுக்க மீனவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென்று மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்  மஹிந்த அமரவீரவிடம் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சரை இன்று வியாழக்கிழமை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனத்திற்கொள்வதுடன், எதிர்வரும் நாடாளுமன்ற ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பிரேரணை முன்வைக்கப்படுமென அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X