2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மனைவியை கொலை செய்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 31 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மனைவியைத் தீ வைத்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட கணவனை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் எச்.எம்.எம்.பஸீல், நேற்று (30) உத்தரவிட்டார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி, சம்மாந்துறை, காரைதீவுப் பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி கணவனால் தீ வைத்துக் கொலை செய்யப்பட்டார்.

இவர்கள் திருமணம் செய்து 3 மாதங்களேயான நிலையில்,  இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இக்கொலைக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X