2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீனவர்களுக்கு நிவாரணம் வேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கடந்த ஒரு வாரகாலமாக நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் ஆழ்கடல் மீன்பிடித்தொழில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அப்பிராந்திய ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் எம்.ஏ.பஷீர் இன்று வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது இப்பிராந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடிக்கான இயந்திரப் படகுகள், ஒலுவில் மற்றும் வாழைச்சேனை படகுத் தரிப்புத் துறைகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. சில படகுகள் கரையில் விடப்பட்டுள்ளன.

பருவமழைக்குரிய காலநிலை அடுத்தடுத்த மாதங்களுக்கு நீடிக்கும் சாத்தியக்கூறு இருப்பதினால், பொருளாதார ரீதியாகப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மீனவர்களுக்கு உதவியளிக்க வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்திற்கொண்டு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டுமென்பதுடன், இதற்கான நடவடிக்கையை பிரதேச அரசியல்வாதிகள் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .