Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
'முன்பள்ளி ஆசிரியர்களின் பணி மகத்தானது மட்டுமல்ல போற்றத்தக்கதுமான ஒரு பணியாகும்' என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் (ரொபின்) தெரிவித்தார்.
விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற பாலர் பராமரிப்பு நிலையத்தின் 24ஆவது ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிறுவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கின்ற சக்தி முன்பள்ளி ஆசிரியர்களிடம் உள்ளதுடன், சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கும் மிகப் பெரிய பொறுப்பும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்றைய தமிழ் சமூகம் கல்வியில் பின்னடைவுகளை கண்டுள்ளது. ஆரம்பத்திலே பிள்ளைகளுக்கு கல்வியின் பால் ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டிய கடமை முன்பள்ளி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. இதற்கு அனைத்து பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் ஒத்தாசை வழங்க வேண்டும்.
தமிழர்களின் பூர்வீகமான அம்பாறை மாவட்டத்தில் 'தமிழர்கள் வாழ்ந்தார்கள்' என்பதை உறுதிசெய்ய வேண்டிய காலத்தை உருவாக்கும் முயற்சியில் இன்று பலர் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறான நிலையை நீக்கி எமது சமூகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்றாக இணைந்து முயற்சிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது ' என அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago