Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனையில் தெருவோரத்தில் யாசகம் செய்தவர்களுக்கு, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர நெறிப்படுத்தலில் உணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாடளாவிய ரீதயில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிபிரதான வீதிகளில் யாசகம் செய்யும் யாசகர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில் கடந்த சில தினங்களாக தொடரச்சியாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் குறித்த உணவு பொதிகள் வழங்கப்பட்டன.
ஞாயிற்றுக்கிழமை(19) மதியம் பொலிஸ் நிலைய நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி நுவரபக்;ஷ விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கி வைத்தனர்.

2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago