Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 12 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளின் போது, வர்த்தகர்களுக்கும் வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டுமென, சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஹஜ்ஜுப் பெருநாள் காலத்தில் வர்த்தக நிலையங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமென அறிவுறுத்தும் கலந்துரையாடல், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அல்-அமீன் ரிசார்ட் தலைமையில், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் நேற்று (11) இடம்பெற்றது.
இதன்போது, இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு, அதற்கான கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.
இதில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவர் எம். எம்.முபாரக், செயலாளர் எம்.எப்.ஏ. பாஸித், பொருளாளர் எம்.எம்.ஏ. ரஹீம் உள்ளிட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago