எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜனவரி 23 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக, வாக்கெடுப்பு நிலையத்தில் அடையாளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு, தற்காலிக அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை பிரதேச செயளாலர் ரீ.ஜே. அதிசயராஜ், நேற்று (22) தெரிவித்தார்.
தேசிய அடயாள அட்டை, செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வூதிய அடையள அட்டை, முதியோர் அடையள அட்டை, ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தால் மதகுருமார்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றும் இல்லாதவர்கள், தேர்தல்கள் திணைக்களத்தால் விநியோகிக்கப்படவுள்ள தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் தெரிவித்தார்.
ஆள் அடையாள அட்டை இல்லாதவர்கள், தத்தமது கிராம சேவை அதிகாரிகளிடம் தற்காலிக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு, அவர் தெரிவித்தார்.
தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகளால் அல்லது திணைக்களங்களினால் மற்றும் அரச நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டைகள் அல்லது வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
27 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
3 hours ago
4 hours ago