2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து பணியாற்றுவது ஊடகவியலாளர்களின் கடமையாகும்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்   

ஊடக தர்மத்தைக் கடைப்பிடித்து பணியாற்றுவது ஊடகவியலாளர்களின் தார்மீகக் கடமையாகும் என அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடவியலாளர் மீரா எஸ்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் நேற்று(11)அட்டாளைச்சேனை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஊடகவியலாளர்கள் மத்தியில் ஒற்றுமையும் பரஸ்பர புரிந்துணர்வும் இருக்க வேண்டும்.இல்லையேல் எமது பணியை நாம் சரிவரச்செய்ய முடியாது.

எனவே, ஊடகவியலாளர்களான நாங்கள் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும்.

ஊடகப் பணி என்பது உண்மையாகவும் நேர்மையாகவும் செய்ய வேண்டிய பணியாகும். செய்திகளையும் தகவல்களையும் சரியாக ஆராய்ந்து பக்க சார்பின்றி எழுதவேண்டும். அதுவே ஊடக தர்மமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X