2025 மே 02, வெள்ளிக்கிழமை

23 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

Princiya Dixci   / 2017 மார்ச் 02 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வங்கலாவாடி  பிரதேசத்தில் 23 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட   இருவர், சம்மாந்துறைப் பொலிஸாரினால் நேற்று (1) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

வங்கலாவாடி பிரதேசத்தினைச் சேர்ந்த  50 மற்றும் 35 வயதுடைய நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

வங்கலாவாடி பிரதேசத்திலிருந்து 23 கிலோகிராம் கஞ்சாவினை கடத்த முற்பட்ட போது, பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, சம்மாந்துறை வங்கலாவாடிப் பகுதியில் குறித்த சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X