Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
திவிநெகுமப் பயனாளிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளேன். விரைவில் இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுமென விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
கடந்த ஆட்சியில் மக்களுக்கு எதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. தற்போது மக்கள் விரும்பிய நல்லாட்சி மலர்ந்துள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான விடயங்களைத் தாராளமாக செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.
கல்முனை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திவிநெகுமப் பயனாளிகளின் உற்பத்தி; வர்த்தக் கண்காட்சி, கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட முன்றலில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தக் கண்காட்சியில் திவிநெகுமப் பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் விற்பனையும் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலக திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விசேட அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி, சிறப்பு அதிதிகளாக கணக்காளர் எம்.எம்.எம்.ஹூசைனுதீன், திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் கே.ராஜதுரை, திவிநெகும மகாசங்க முகாமையாளர் எஸ்.எஸ்.பரீரா, திட்ட முகாமையாளர் ஏ.சி.அன்வர், திவிநெகும வங்கி முகாமையாளர்களான எம்.எம்.எம்.முபீன், எஸ்.சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago