2025 ஜூன் 30, திங்கட்கிழமை

'நிதி ஒதுக்கிடுவேன்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 15 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

2016ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் எமது அமைச்சு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்ற போது மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளுக்காக நிதிகளை ஒதுக்கீடு செய்து தருவேன் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தினை முழுமையாக அபிவிருத்தி செய்யுமாறு பாடசாலை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையையடுத்து அதனை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டு மைதானத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக புதன்கிழமை (14) நேரில் விஜயம் மேற்கொண்டு பார்வையிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது, கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர்; எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.முஸ்தபா, எஸ்.உமர்மௌலான உள்ளிட்ட பலர் இணைந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X