Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த 02 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 41 பேருக்கு எதிராக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்; நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்முனைப் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் பி. பேரின்பலம் இன்று புதன்கிழமை (07) தெரிவித்தார்.
நிந்தவூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்பு பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 41 நபர்கள் இனங்காணப்பட்டு இவர்களுக்கெதிராக நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை தெற்கு மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களிலேயே கூடுதலான டெங்கு நோயாளர்கள் காணப்படுவதாகவும், இப் பிரதேசங்களில் தொடர்ந்து பரிசோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் 09ம் திகதி வெள்ளிக்கிழமை வரை முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago