2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாணவியை பாலியல் வல்லுறவு புரிந்த 2 பிள்ளைகளின் தந்தை விளக்கமறியலில்

Super User   / 2012 ஜூன் 06 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில், கோமாரி பிரதேசத்தில் 12 வயது பாடசாலை மாணவியொருவரை பலாத்தகாரமாக பாலியல் வல்லுறவு புரிந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

கோமாரி, செல்வபுரம் 2ஆம் இரண்டாம் பிரிவு பிரதேசத்தில் தாய் தந்தையை இழந்து அம்மம்மாவின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் 12 வயது பாடசாலை சிறுமியை அவரது உறவினரான இரண்டு பிள்ளைகளின் தந்தையான 30 வயதுடையவர் சம்பவ தினமான கடந்த திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் தனிமையில் இருந்த போது சிறுமியின் வீட்டிற்கு சென்ற உறவினரான இவர் தனது தாயாரைக் காணவில்லை எனவும் அவரை தேடிப்பார்ப்பதற்காக தன்னுடன் வருமாறு சிறுமியை அழைத்துள்ளார்.

இதனையடுத்து அருகிலுள்ள சவுக்கு காட்டிற்குள் கூட்டிச்சென்று பலாத்தகாரமாக பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார் இதன்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பிரதேச இளைஞர்கள் அங்கு சென்று பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவரை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பொத்துவில், இன்பெட்டர் ஏற்றத்தை சேர்ந்த இவர் மனைவியுடன் எற்பட்ட சண்டையையடுத்து இவரின் பிறந்த ஊரான செல்வபுரத்திரல் தாயாரின் வீட்டில் தங்கியருந்த போதே மதுபோததையில் இந்த சம்பவத்தில் ஈடுபடடுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபரை நேற்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஜ.என்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .