2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளும் 27 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன

Super User   / 2011 ஜனவரி 26 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இன்று புதன்கிழமை வரை இலங்கை தமிரசு கட்சி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியனவும், 27 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளது என அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.

இதேவேளை, 115 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்மாந்துறை, காரைதீவு, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச சபைகளுக்கு இலங்கை தமிரசுக் கட்சியும், அம்பாறை நகர சபை, சம்மாந்துறை, லதுகல, இறக்காமம், உகன, மகா ஓயா. பதியத்தலாவ மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய பிரதேச சபைகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியும், நாவிதன்வெளி பிரதேச சபைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .