2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவில் பகுதியில் 10 மீனவர்களை காணவில்லை என புகார்

Super User   / 2011 ஜனவரி 12 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொத்துவில் கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற 10 பேரை காணவில்லை என புகாரிடப்பட்டுள்ளது.

இவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை மீன்பிடிக்க சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ள 10 மீனவர்களையும் தேடி கண்டுபிடிக்க உதவுமாறு மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் தென் மாகாணத்திற்கு பொறுப்பான கடற் படை தளபதியிடமும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .