Super User / 2011 ஜனவரி 30 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சி.அன்சார்)
1990ஆம் ஆண்டு பயங்கரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினரான அஷ்-ஷஹீத் எம்.வை.எம்.மன்சூரின் 21ஆவது ஆண்டு நினைவு தின வைபவமும், துஆப் பிரார்த்தனையும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபவத்தில் இடம்பெற்றது.
சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நiடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு நினைவுப் பேருரையாற்றினார்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ரி.ஹஸன் அலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் மஜீட், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ. மஜீட், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள், அரசியல் பீட உறுப்பினர்கள், அம்பாறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago