2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனையில் 3.259 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Super User   / 2012 ஜூன் 05 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கல்முனை பிரதேசத்தில் ஒரு தொகுதி கஞ்சாவினை கல்முனை பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை கைப்பற்றியுள்ளனர். காரைதீவு பிரதேசத்திலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்தே குறித்த கஞ்சா மீட்கபப்ட்டுள்ளது.

கல்முனை கண்ணகி அம்மன் கோயில் வீதியில் வைத்து குறித்த முச்சக்கர வண்டியை சுற்றி வளைத்த போதே, சுமார் 3.259 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவையை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர். கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி ரீ.ஹானூன் டோல் தலைமையிலான பொலிஸ் குழுவினரே கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இதன்போது, கல்முனை பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்றுமொருவர் தப்பி  ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0

  • jeezan Friday, 08 June 2012 05:21 PM

    என்ன கொடுமைடா இலங்கையில் நடக்குது..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .