Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 05 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி இரவு மூன்று நகைக்கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதான இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தங்க நகைகள் பலவும் கைப்பற்றப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரணதுங்க தெரிவித்தார்.
கடந்த 26ஆம் திகதி, திருக்கோவில் பிரதான வீதியில் உள்ள மூன்று நகைக்கடைகளை உடைத்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டன.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்ட சந்தேகநபர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago