2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை தொடர்பாக அதிபர்களுக்கு பயிற்சிப் பட்டறை.

Kogilavani   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல்.மப்றூக்)

பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை மேற்கொள்வது தொடர்பில் கல்முனை கல்வி வலய அதிபர்களுக்கு பயிற்சிகளை வழங்கும் பொருட்டு, கல்முனை கல்வி அலுவலகம் இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையொன்றை நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்தது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற மேற்படி பயிற்சிப் பட்டறையை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. தௌபீக் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எஸ்.அப்துல் ஜலீல், எம். சிவப்பிரகாசம் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஜலீல் இங்கு உரையாற்றும்போது, பாடசாலைகளில் உள்ளக மேற்பார்வை மேற்கொள்வதன் தேவை, மற்றும் அதன் விளைவுகள் குறித்து விளக்கமளித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் இப்பயிற்சி பட்டறை தொடர்ந்து நடைபெறுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

2 hours ago - 0     - 5

மன்னிப்பு

2 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

2 hours ago - 0     - 3