2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வீதிகளின் பெயர், வீடுகளின் இலக்கம் இல்லாததால் அசௌகரியம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.சரவணன்)

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல வீதிகளின் பெயர் பலகை இல்லாமை, வீதிகளுக்கான பெயரின்மை மற்றும் வீடுகளுக்கான இலக்கங்கள் இல்லாததனால் வங்கி மற்றும் ஏனைய தபால்களை வழங்க முடியாமல் திருப்பி அனுப்பவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேசத்தில் பல வீதிகளுக்கு பெயர்கள் சூட்டப்படவில்லை. அதேபோன்று வீதிகளின் பெயர் பலகை மற்றும் வீட்டு இலக்கங்கள் எதுவும் சரியானமுறையில் இல்லை. இவ்வாறான நிலையில் பொதுமக்களுக்கு வரும் தபால்களில் பெயரும் ஊரின் பெயரும் பிரதேசத்தின் பிரிவு மட்டும் விலாசமாக கொண்டுள்ளது. இவ்வாறான தபால்களை உரியவர்களிடம் வழங்கமுடியாதுள்ளதுடன் அதனை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என தபால் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமை காரணமாக பொதுமக்கள் தமக்கு கிடைக்கவேண்டிய தபால் கிடைக்கவில்லை என தபால் ஊழியர்களிடம் குறைபடுவதும் பின் புரிந்துகொள்வதும் அன்றாடம் நிகழ்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், தபால்கள் கிடைக்காததனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர் என கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

2 hours ago - 0     - 3

‘படை தலைவன்’

3 hours ago - 0     - 5

மன்னிப்பு

3 hours ago - 0     - 4

‘மெஜந்தா’

3 hours ago - 0     - 3