2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மருதமுனையில் சிறுவர் சந்தை

Kogilavani   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

      (ஹனீக் அஹமட்)

முன்பள்ளி  பாடசாலைகளில் சிறுவர் சந்தைகளை நடத்தும் பாடத்திட்டச் செயற்பாட்டின் கீழ் மருதமுனை சம்ஸ்'95 முன்பள்ளியில் நேற்று சிறுவர் சந்தையொன்று இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதைக் காணவும்,  பொருட்களைக் கொள்வனவு செய்யவும் என மேற்படி சிறுவர் சந்தைக்கு ஏராளமானோர் வருகை தந்திருந்தனர்.

சந்தையில் பொருட்களை சிறுவர்கள் விற்பனை செய்த முறையும், அவர்கள் பெரியவர்கள்  போன்று  வேடமிட்டு ஆடையணிந்திருந்தமையும் தம்மை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தியதாக, அங்கு சமூகமளித்திருந்தவர்கள் கூறினர்.

முன்பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் சிறுவர் சந்தை நிகழ்ச்சித் திட்டமானது, ஒரு செயற்பாடாக உள்ளடக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .