2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் இருந்து புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்பவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு மஸ்ஜிதுல் சாலிஹீன் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம் பெற்றது.

மௌலவி அல்ஹாஜ் யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது ஹஜ்ஜுக்கு செல்வோருக்கான வழிகாட்டல் ஆலோசனைகள் இடம்பெற்றதுடன் கட்டித்தழுவி முஸாபாக்களும் செய்து கொணடனர்.

இலங்கையிலிருந்து முதன் முதலில் ஹஜ்ஜுக்காக மக்கா செல்லும் குழுவில் இவர்கள் பயணமாகவுள்ளனர்.




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .