2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்ட உதவி வழிகாட்டல் விழிப்புணர்வும் கருத்தரங்கும்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 18 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.எல்.ஏ.அஸீஸ்)

யூ.எஸ்.எய்ட் நிறுவன நிதி உதவியில் 'ஸ்பேஸ்' நிறுவனத்தினால் நடத்தப்பட்ட சட்ட உதவி வழிகாட்டல் விழிப்புணர்வு கருத்தரங்கு சம்மாந்துரை பிரதேசத்தின் வீரமுனை கிராமத்தில் நேற்று இடம்பெற்றது.

"ஸ்பேஸ்" நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் எம்.ஐ.ஜுனைடீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சட்ட உதவி விழிப்பூட்டல் நிகழ்வுடன் இணைந்ததாக சட்ட உதவிகளை பெற்றுக்கொடுத்தல் வேலைத்திட்டமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக வைத்தியரும் சட்டத்தரணியுமான கே.சமீம் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்வாறான தொடர் நிகழ்வுகள் சம்மாந்துரை பிரதேசத்தின் வீரமுனைஇ மஜீதுபுரம்இ மலையடி கிராமம் போன்ற கிராமங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .